Tuesday, October 21, 2008

இப்படியும் சிலர் !!!

சமீபத்தில் பத்திரிக்கை ஒன்றில் நான் படித்தது:

ராஜா முத்தையா செட்டியார் தன் அறுபதாம் வயது நிறைவு விழாவை 1941இல் கொண்டாடினார்.
பிராமணர்கள் 60 பேருக்கு மாடு, வீடு, வேட்டி, துண்டு தானம் செய்தார். பிராமணர் அல்லாதாரின் நலம் காக்கும் "ஜஸ்டிஸ்" கட்சியைச் சேர்ந்தவர் ராஜா முத்தையா செட்டியார். இவர் இப்படி பிராமணர்களுக்கு தானம் கொடுத்தது மூட நம்பிக்கை என்றும் சமுக விடுதலைக்கு எதிரான செயல் என்றும் காரசாரமாக ஒரு தலையங்கம் எழுதினார் அண்ணாதுரை.
அதை இ.வே.ரா.வின் "விடுதலை" பத்திரிகையில் வெளியிட முனைந்தார். இ.வே.ரா.வும் "கட்டாயம் எழுத வேண்டும், விடாதே", என்றார்.
காரணம் முத்தையா செட்டியார் தன் விடுதலை பத்திரிகைக்கு பணம் தரவில்லை என்ற கோபம் அவருக்கு.
அண்ணாதுரை எழுதிய தலையங்கம் அச்சு கோர்க்கப்பட்டு , அச்சு எந்திரதிலும் ஏறி விட்டது. அப்போது பார்த்து, முத்தையா செட்டியாரிடம் இருந்து அறுபதம் ஆண்டு விழா நினைவு பரிசாக இ.வே.ரா.,வுக்கு ஆயிரம் ரூபாய்க்கு செக் வந்து விட்டது.
உடனே அண்ணாதுரையை அழைத்து "அந்த தலையங்கத்தை அச்சிடதே" , என்றார் இ.வே.ரா. அண்ணாதுரை சம்மதிக்கவில்லை. "எழுதியது எழுதியதுதான்." என்றார். "சரி சரி. அதே கருத்தை நானே தலையங்கமாக எழுதி விடுகிறேன்...."என்று சொல்லி உப்பு சப்பில்லாமல், வழ வழா, கொழ கொழா என்று ஒரு தலையங்கத்தை எழுதி வெளியிட்டார் இ.வே.ரா.
காசுக்கு முன் கொள்கையாவது வெங்காயமாவது!!!

6 comments:

priya said...

ur story is good..
im appreciating ur work..
but, u r having some spelling mistakes. correct it dear..
[:)]

Saranya Venkateswaran said...

well, i still dont know to make proper use of the tamil software.... i suppose.

Unknown said...

i cant understand anything....

priya said...

hey srini.. u cant understand tamil or this story!!!

Unknown said...

i want to say behaind u ,, eipadium silar

Unknown said...

i didnt understand what she wrote...