Wednesday, April 14, 2010

சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்

உங்க எல்லாருக்கும் என் இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

தமிழ் குடும்பங்கள் இந்த நாளை எப்படி கொண்டாடுறாங்க தெரியுமா? பெண்கள் விடியற்காலையில் எழுந்து எண்ணை தேய்த்து தலைகுளித்து விஷு கனி வைக்கிறார்கள். ஒரு இலையில் முக்கனிகள், அரிசி, பருப்பு, வெல்லம் வைத்து கடவுளைக் கும்பிடுகிறார்கள். சாதம், வடை, பாயசம், அவியல், அப்பளம், கிழங்கு, சாம்பார், மணமணக்கும் ரசம், மாங்காய் பச்சடி எல்லாம் செய்து சுடச்சுட பரிமாறுவார்கள்.






பஞ்சாங்க முறைப்படி இந்த வருடத்தின் பெயர் "விக்ருதி" வருடம். புத்தாண்டு என்பதால் சிலர் கோவிலில் நடக்கும் சிறப்பு பூஜைகளில் பங்கேற்பார்கள். இந்த வருடம் கடைபிடிக்க சபதம் எடுப்பார்கள்.
சிலர் டி.வி யில் புத்தாண்டு நிகழ்சிகளை பார்த்தபடியே இருப்பார்கள். டீன் ஏஜ் பையன்கள் திரையரங்குகளுக்குச் சென்று புதிதாய் வெளிவந்த படங்களை நண்பர்களுடன் பார்ப்பார்கள்.

இப்படி பல பேர் பல விதமாக் கொண்டாடுறாங்க. அதனால நான் இப்ப என்ன சொல்ல வரேன்னா... நீங்களும் உங்க இஷ்டப்படி எப்படி வேணும்னாலும் கொண்டாடலாம்!

No comments: